10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு குறித்த கவுன்சிலிங் – கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கை!!
அரசு பள்ளி மாணவர்கள் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு முழு பாடத்திட்டத்தை உள்ளடக்கிய பொதுத்தேர்வினை எதிர்நோக்குவதால் மன அழுத்தத்திற்கு உள்ளாவர்கள். இதனை தவிர்க்கும் பொருட்டு தேர்வை எதிர் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள்:
கொரோனா காலகட்டத்தில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் பொது தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்படாமல் வழக்கம்போல நடைபெற உள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பல்வேறு வகையான சிக்கல்களை எதிர்கொள்வார்கள். மேலும் இது தொடர்பாக டெல்லியில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த சுற்றறிக்கையில், மாணவர்கள் தேர்வு நேரத்தில் மன அழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை, உணவு பழக்க வழக்கத்தில் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். மேலும் தற்போது கொரோனா கால கட்டத்திற்கு பிறகு வழக்கமான முறையில் முழு பாடத்திட்டத்தை உள்ளடக்கிய பொதுத் தேர்வுகள் நடைபெற இருக்கின்றது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் சத்துணவு முட்டை – அதிரடி அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதனால் இவர்கள் அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ள நாளை அனைத்து அரசு பள்ளிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்த பயத்தை போக்கும் வகையில் கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் தங்களின் மன அழுத்தத்தை கையாளுவதற்கான வழிமுறைகளையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..