இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளி திட்டம் – தில்லி அரசு அறிமுகம்!
இந்தியாவில் தொலைதூரப்பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் டெல்லி அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மெய்நிகர் பள்ளி திட்டம்
இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் கிராமப்புற பகுதியில் வசிக்கும் மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள இயலவில்லை. இதனால் கிராம பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அதன்படி தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் தொலைதூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களால் சரிவர பள்ளிகளுக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. அத்துடன் மழைக்காலங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பள்ளிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. அதனால் பள்ளிகளுக்கு அப்பால் தொலை தூரங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் “மெய்நிகர் பள்ளி திட்டம்” என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? முதல்வர் விளக்கம்!
இத்திட்டம் முதற்கட்டமாக தலைநகர் டெல்லியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளியை டெல்லியில் தொடங்கியுள்ளதாக பெருமையாக கூறியுள்ளார். அத்துடன் இப்பள்ளியில் 9ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். இப்பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் மாணவர்களால் ஆன்லைன் முறையில் பாடங்களை கவனிக்கவும் மற்றும் பதிவு செய்திடவும் முடியும் என்றும் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்