தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் சேர்க்கை குறித்த புகார் – நீதிமன்றம் உத்தரவு!
டெல்லியில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் முறை கேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. அது குறித்து டெல்லி அரசுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
மத்திய அரசு ஏழை எளிய மக்களின் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் டெல்லியில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டம், 2009ன் படி சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கான ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 50,000 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பள்ளிகளில் அரசு வழங்கிய ஒதுக்கீடு நிரப்படவில்லை என புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும் டெல்லி பள்ளிக் கல்விச் சட்டம், 1973 மற்றும் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான டெல்லி உரிமை விதிகள், 2011 ஆகியவற்றின் கீழ் உள்ள சட்டப்பூர்வ விதிகளுக்கு இணங்குவதை உறுதிபடுத்த வேண்டும் என அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டது.
குழந்தைகளுக்கான ஆதார் கார்டு – UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் EWS பிரிவின் கீழ் குழந்தைகளுக்கான சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் எனவும், மாணவர்களை சேர்க்கத் தவறிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வி இயக்குனரகத்திற்கு உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றம் பொருளாதாரத்தில் பலவீனமான பிரிவுகள் மற்றும் பின்தங்கிய குழுக்களைச் சேர்ந்த குழந்தைகளின் சேர்க்கை செயல்முறையை கண்காணிக்க வேண்டும் என குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான டெல்லி ஆணையம் (டிசிபிசிஆர்) மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) ஆகியவற்றிற்கு தற்போது உத்தரவிட்டுள்ளது.