ஜூன் 14 முதல் பேருந்துகள் இயங்க அனுமதி – மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு!
கொரோனா பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு டெல்லி அரசு முழு ஊரடங்கு உத்தரவினை மேலும் ஒரு வார காலம் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் பேருந்துகள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வுகள்:
டெல்லியில் சனிக்கிழமையன்று 213 புதிய தொற்று பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது கடந்த மூன்று மாதங்களுக்கும் மிகக் குறைவான பாதிப்பு எண்ணிக்கையாகும். இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையை 14,30,884 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் மொத்த இறப்பு எண்ணிக்கை 24,800 ஆக உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கு உத்தரவு கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 21ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஆணை பிறப்பித்து உள்ளார்.
- இதில் கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ஏற்கனவே உள்ளபடி தொடரும் என கூறப்பட்டுள்ளது.
- உணவகங்கள் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
- வாராந்திர சந்தைகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் 50 சதவீத விற்பனையாளர்கள் மற்றும் ஒவ்வொரு நகராட்சி மண்டலத்திலும் ஒரு நாளைக்கு ஒரு சந்தை மட்டுமே செயல்படும்.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!
- அரசு அலுவலகங்கள் முழு திறனுடனும், 50 சதவீத திறன் கொண்ட தனியார் அலுவலகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- டெல்லி மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதி.
- பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்படும்.
- நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நீர் பூங்காக்கள் ஆகியவையும் மூடப்படும், பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது. மத வழிபாட்டு தலங்கள் திறக்கலாம், ஆனால் பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.