தடையை மீறி செல்லும் வாகனங்களுக்கு ரூ. 20,000 அபராதம் – டெல்லி அரசு அதிரடி!
நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்றின் மாசுபாடு அதிகமாக இருப்பதால், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம் அறிவிப்பு:
டெல்லியில் காற்றின் மாசுபாடு அதிகமாக இருப்பதாக மாசு கட்டுபாடு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் காற்றின் தன்மை மிகவும் மோசமாக இருப்பதால் இணை நோய் இருக்கும் முதியவர்களும், சிறு குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகரில் உள்ள பல மருத்துவமனைகளில் குழந்தைகள் சுவாசக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் வாகனங்கள் மூலமாக ஏற்படும் மாசுபாட்டை குறைக்க மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல், தனிப்பட்ட வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில வாகனங்களை இயக்குவதற்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. அந்த வகையில் BS-VI வாகனங்கள் தவிர நான்கு சக்கர டீசல் இலகுரக மோட்டார் வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் நவ.3வது வாரத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் – பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
இந்த தடையை மீறி வாகனங்களை இயக்கினால் ரூ. 20,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் மின்சாரம் மற்றும் சிஎன்ஜி தவிர மற்ற டிரக்குகள் நுழைவதற்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. மேலும் இன்று (நவ 5) முதல் டெல்லியில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.