இன்று முதல் ஏப்ரல் 26 வரை முழு ஊரடங்கு அமல் – அரசு உத்தரவு!!
கொரோனா தொற்று பரவல் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் இன்று இரவு முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு உத்தரவு:
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மேலும் ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில் டெல்லி அரசு இன்று இரவு முதல் அடுத்த திங்கள் காலை வரை (ஏப்ரல் 26) முழுமையான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது.
TN Job “FB Group” Join Now
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த 7 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்து உள்ளார். இந்நாட்களில் அனைத்து தனியார் அலுவலக ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே திறந்திருக்கும் என்பதையும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்கு கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
பள்ளிகள் மே 15 வரை மூடல், இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த முதல்வர் கடந்த வாரம் வார இறுதி ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தார். அங்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் விகிதம் 29.74 சதவீதமாக உயர்ந்துள்ளது.