பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது? மாநில முதல்வர் விளக்கம்!!
டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருக்கும் வரை பள்ளிகளை திறப்பது பற்றி யோசிக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று:
நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அறிவிப்புக்கு பின்னர் 2020ம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.
இரண்டாம் அலை:
கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் செயல்பட மாநில அரசுகள் அனுமதியளித்தது. தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக அளவில் அதிகரித்து வந்த காரணத்தால் மீண்டும் கடந்த வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டது. மேலும், அங்கு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
11ம் வகுப்பு பொதுதேர்வுகள் தள்ளிவைப்பு – அரசு உத்தரவு!!
மீண்டும் பள்ளிகள் திறப்பு:
கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை பள்ளிகளை மீண்டும் திறக்க முடியாது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று சூழலில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்