ஜூன் 7 முதல் மெட்ரோ ரயில் சேவைகள், மால்கள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு!
டெல்லியில் கொரோனா பாதிப்பு வீதம் குறைந்து வரும் சூழலில் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் சேவைகள், மால்கள் இயக்கத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
கொரோனா 2 ஆம் அலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட தலைநகர் டெல்லியில், முழுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் தற்போது நோய் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த மாதத்தில் 30 ஆயிரத்துக்கும் மேலாக புதிய பாதிப்புகளும், அதிகளவு இறப்பும் பதிவு செய்யப்பட்டு வந்த டெல்லியில், தற்போது தினசரி பாதிப்புகள் 500 ஆக காணப்படுகிறது. இதன் காரணமாக முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அளிப்பதாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் சனிக்கிழமை (மே 29) அன்று அறிவித்தார்.
TN Job “FB Group” Join Now
இதை தொடர்ந்து கடந்த வாரம் முதல் டெல்லியில் முதலாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளாக தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நடவடிக்கைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டுமாக தலைநகர் டெல்லியில் இரண்டாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் தற்போது அறிவிப்பட்டுள்ளது. அதன் படி, ஜூன் 7 ஆம் தேதி முதல் மெட்ரோ சேவைகளை மீண்டும் துவங்க அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில், மெட்ரோ ரயில்களில் அதிகபட்சமாக 50 சதவீத பயணிகளை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி? அதிகாரிகள் விளக்கம்!
இந்த மெட்ரோ ரயில் பயணத்தின் போது, பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிவது போன்ற நோய் தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில், பயணிகள் ஒரு இருக்கை இடம் விட்டு அமரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மெட்ரோ நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பு பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். இதற்கிடையில், டெல்லியில் ஷாப்பிங் மால்கள் மற்றும் சந்தைகள் உள்ளிட்டவை ஜூன் 7 திங்கள் முதல் மீண்டும் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு உத்தரவின்படி, சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் தினசரி திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.