நாளை (நவ.5) முதல் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை – டெல்லி முதல்வர் உத்தரவு!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மோசமாகி இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி நாளை (நவ. 5) முதல் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டி இருக்கிறது. இதனை சரி செய்ய அரசு கட்டுமான பணிகளையும், இடிப்பு பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது. மேலும் கட்டுமான ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க, முதல்வர் மாதந்தோறும் ரூ. 5000 நிதியுதவி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் குழந்தைகளும், இணை நோய்யுடன் இருக்கும் முதியவர்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது டெல்லியில் உள்ள குழந்தைகளில் பலர் சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமை செயலருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
தமிழகத்தில் ஆவின் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்வு – அரசு அதிரடி உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
அதில் மாநிலத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. அதனால் பல குழந்தைகளுக்கு உடல்நிலை சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அரசு இதனை சாதாரணமாக எடுக்க கூடாது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த கடிதத்தை ஏற்று டெல்லியில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு நாளை ( நவ. 5) முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் 5 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் வெளிப்புற செயல்பாடுகளை நடத்த வேண்டாம் என முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.