IPL டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதி – போட்டி மும்பைக்கு மாற்றம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
IPL டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதி - போட்டி மும்பைக்கு மாற்றம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
IPL டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதி - போட்டி மும்பைக்கு மாற்றம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
IPL டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதி – போட்டி மும்பைக்கு மாற்றம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐபிஎல் 15வது சீசன் எந்த பிரச்னையுமின்றி விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இப்போது பிரச்னை ஆரம்பமாகியுள்ளது. டெல்லி அணியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டெல்லி – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான நாளைய ஐபிஎல் போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஐபிஎல் போட்டி மும்பைக்கு மாற்றம்:

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், கொரோனா மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 2020ம் ஆண்டு ஐபிஎல் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பார்வையாளர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டது. 2021ம் ஆண்டு ஐபிஎல்லின் முதல் பாதி சீசன் இந்தியாவில் நடத்தப்பட்ட நிலையில், பாதியில் கொரோனா பாதிப்பு அதிகமானதையடுத்து, 6 மாதங்களுக்கு பிறகு அமீரகத்தில் பிற்பாதி நடத்தப்பட்டது. கொரோனா பாதிப்புகள் வெகுவாக மட்டுப்பட்டதையடுத்து, இந்த சீசன் இந்தியாவில் நடத்தப்படுகிறது. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக மும்பை மற்றும் புனே ஆகிய 2 நகரங்களில் மட்டுமே லீக் போட்டிகள் முழுவதுமாக நடத்தப்படுகின்றன.

TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

நேற்றைய போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி தனது 5-வது வெற்றியை பதிவு செய்தது குஜராத் டைடன்ஸ் அணி. இதன்மூலம் புள்ளி பட்டியலிலும் முதல் இடத்தில் குஜராத் உள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லி வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான சூழலில், டெல்லி அணி வீரர்களின் புனே பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. நாளை நடைபெறும் போட்டிக்காக புனே செல்ல தயாராக இருந்த வீரர்கள் இன்று அவர்களது அறையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர்கள் போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாளைய ஐபிஎல் போட்டி வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெல்லி வீரருக்கு கொரோனா உறுதியான நிலையில் புனேவில் நடக்கவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!