சிக்கி தவிக்கும் டெல்லி.. இந்த செயல்பாடுகளுக்கு தடை – மீறினால் ரூ.15 லட்சம் அபாரதம்!
நாட்டில் தற்போது வட மாநிலங்களில் நிலவி வரும் காற்று மாசுப்பாடு குறித்த செய்திகள் தான் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது காற்றின் தரம் சற்று மேம்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரம்:
டெல்லியில் காற்றின் தரம் முன்னதாக AQI 447 என்ற மிக மோசமான நிலையில் இருந்தது. இதனால் பொது போக்குவரத்துகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் முடிந்த அளவு வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வர பொங்கல ஜமாய்க்கலாம்! தமிழக ரேஷன் அட்டை தாரர்களுக்கு பணபரிசு.. எவ்வளவு தெரியுமா?
Exams Daily Mobile App Download
பள்ளி மாணவர்கள் காற்றின் மோசமான தரத்தினால் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும்,டெல்லியை சுற்றியுள்ள என்.சி.ஆர் பகுதிகளிலும் அதிக அளவில் காற்று மாசு அடைந்து வருகிறது. இதனால் கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது என்.சி.ஆர் (National Capital Region) பகுதிகளில் தனியார் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதை மீறினால் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.