ஆங்கிலத் துறையில் தமிழ் எழுத்தாளரின் படைப்புகள் நீக்கம் – டெல்லி பல்கலை அறிவிப்பால் சர்ச்சை!
டெல்லி பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் பாடத்திட்டத்தில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழ் படைப்புகள் நீக்கம்:
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பல தரப்பட்ட மக்களின் வாழ்கை முறை மற்றும் அவர்கள் புரிந்துள்ள சேவைகள் குறித்து விரிவாக மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக பாடத்திட்டத்தில் அது சார்ந்த செய்திகள் இடம்பெறும். இதில் தமிழ் சார்ந்த எழுத்தாளர்களின் கதைகள், புதினங்கள், கவிதைகள் மற்றும் அவர்கள் பங்கெடுத்த சமூக சேவைகள் குறித்த பதிவுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். இவை அனைத்தும் பல்கலைக்கழக மானிய குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
செப்டம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – RBI வெளியீடு!
இந்த நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள ஆங்கிலத்துறையின் பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் சார்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் இரவோடு இரவாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட தயாரிப்பு குழு முடிவுகளின் அடிப்படையில் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதில் குறிப்பாக, பிரபல வங்காள எழுத்தாளரும் பழங்குடி இன மக்களின் நலனுக்காக பாடுபட்ட சமூக ஆர்வலரான மஹாஸ்வேதா தேவியின் சிறுகதைகள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களான பாமா, சுகிர்தராணி ஆகியோரின் தமிழ் சார்ந்த படைப்புகள் இடம்பெற்றிருந்தன. இவை அனைத்தும், ஆங்கிலத்துறை சார்ந்த பேராசிரியர்களுக்கு தெரியாமலே நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. இந்த நீக்கப்பட்ட பதிவுகளுக்கு பதிலாக ராமாபாயின் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட உள்ளன. இதனை அடுத்து, பல்கலைக்கழக பாடத்திட்ட குறிப்பில் தமிழ் சார்ந்த படைப்புகள் அதிரடி நீக்கம் செய்யப்பட்டது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.