தமிழகத்தில் குரூப் 2 & 2A தேர்வு முடிவு வெளியீட்டில் இழுபறி? காரணம் இது தான்!
தமிழகத்தில் கடந்த மே மாதம் குரூப் 2 & 2A தேர்வுகள் நடைபெற்றது. மேலும் இதற்கான முதல் நிலை தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
குரூப் 2 தேர்வு:
தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் அரசு ஆண்டுதோறும் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு போட்டி தேர்வுகளும் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து நாடு பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் அனைத்து போட்டித் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன.
மீண்டும் தொடங்கியது கொரோனாவின் அடுத்த அலை? புதிய கட்டுப்பாடுகள் அமல்!
அந்த வகையில் தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலி பதவிகளுக்கான குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. மேலும் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து இதற்கான முதல் நிலை தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே 7138 குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் ஜூலை 24ம் தேதி நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு முறை தொடர்பான வழக்கின் காரணமாக குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாலும் முடிவுகள் தள்ளிப் போவதாக கூறப்படுகிறது. இதை அடுத்து பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு கடந்த 24 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேர்வாணையம் செப்டம்பர் 2 ஆம் தேதி தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதில் செப்டம்பர் மாதத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்