தமிழகத்தில் பிறப்பு, இறப்பு பதிவின் காலதாமத கட்டணம் விலக்கு – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் பிறப்பு, இறப்பினை உரிய காலத்தில் பதிய தவறினால் வசூலிக்கப்படும் காலதாமத கட்டணத்தை முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்துள்ளார். அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
காலதாமத கட்டணம் விலக்கு:
தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு போன்ற நிகழ்வுகளை 21 நாட்களுக்கும் பதிய வேண்டும் என்பது பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம், 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000 – ன்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதியாவிட்டால் சான்றிதழ் பெறுவது கடினம். 21 நாட்களுக்குள் பதியாவிட்டால் கால தாமதத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படும். 21 நாட்களுக்கு மேல் பதிவு செய்பவர்கள் 100 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். 30 நாட்களுக்கு மேல் ஆனால் 200 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும், ஓராண்டிற்கு மேல் ஆனால் ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 13 முதல் CS தேர்வுகள் தொடக்கம் – புதிய அட்டவணை வெளியீடு!!
தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த உயிர்க்கொல்லி வைரஸ் பரவலை தடுக்க அரசு தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை தினசரி புதிய உச்சம் அடைகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டோர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்நேரத்தில், இந்த கட்டண முறையானது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமமாக இருக்கிறது என முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனை ஆராய்ந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறப்பு, இறப்பு காலதாமத கட்டணத்தை ரத்து செய்துள்ளார். இதன் படி 1-1-220 முதல் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு காலதாமத கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண விலக்கால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பீட்டினை அரசே ஏற்று ஈடு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.