12ம் வகுப்பு முடித்தவர்களா?? உங்களுக்கான அரிய வேலைவாய்ப்பு – உடனே பாருங்க!
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்ட படிப்பு வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக 2022-23ஆம் கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்ட படிப்பு படிப்பதற்கான வழிவகை செய்ய இருப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, கடந்த 2022 ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பில் 60% பெற்ற மாணவர்கள் மற்றும் 2023 ஆம் ஆண்டு 75% பெற்ற மாணவர்கள் இந்த ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக பலன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
WHATSAPP UPDATE – புதிதாக 3 ஷார்ட்கட் அமைப்புகளுடன் செயல்பாடு!
மேலும், குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் எனவும், HCL நிறுவனத்தின் மூலமாக நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் மாணவர் கட்டாயமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலமாக இலவசமாக வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
அடுத்ததாக, இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் www.tahdco.com என்கிற இணையதள முகவரி பக்கத்தின் மூலமாக சென்று தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தற்போது அறிவித்துள்ளார். மேலும், இந்த அரிய வாய்ப்பினை அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.