IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் – தீபக் சாஹர் விலகல்?
தற்போது காயத்தால் பாதிக்கப்பட்டு இந்திய அணியில் இருந்து விலகி இருக்கும் தீபக் சாஹர் IPL 2022 போட்டியில் இருந்து வெளியேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தீபக் சாஹர்
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் இந்திய அணிக்கு இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய பந்து வீச்சாளராக செயல்பட்ட தீபக் சாஹருக்கு தொடை தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதாவது, கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் தீபக் சாஹர் வீசிய 11 பந்துகளில் கைல் மேயர்ஸ் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோரை ஆட்டமிழக்க செய்ததால், ஒரு பந்துவீச்சு ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் தொடை தசையில் ஏற்பட்ட காயத்தால் அவர் தனது 2வது ஓவரை முடிக்க முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மார்ச் 28 முதல் 10 &12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம் – மாநில கல்வி வாரியம் அறிவிப்பு!
இதன் காரணமாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து தீபக் சாஹருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது இது குறித்த அறிக்கையின்படி, தீபக் சாஹரின் காயம் மோசமாக தெரிகிறது என்றும், காயம் காரணமாக அவர் மார்க்யூ இந்தியன் டி20 லீக்கை இழக்க நேரிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதே போல இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் சூர்யகுமார்யாதவுக்கும் காயம் காரணமாக இந்தியா – இலங்கைக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கி தேர்விற்கு தயாராவோரா? – ஆன்லைன் வகுப்புகள்..!
இப்போது வரும் ஏப்ரல் 2ம் தேதியில் துவங்க இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2022 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) சார்பாக விளையாட இருக்கும் தீபக் சாஹர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. முன்னதாக IPL 2022 மெகா ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை சென்னை சூப்பர் கிங்ஸ் 14 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அந்த வகையில் CSK அணியின் பந்து வீச்சின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட சாஹர் தொடை தசை காயத்தால் IPL போட்டிகளில் இருந்து விலகலாம் என்று வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.