சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – தீபக் சாஹர் கிடைக்க வாய்ப்பு? ஷாக்கிங் தகவல்!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - தீபக் சாஹர் கிடைக்க வாய்ப்பு? ஷாக்கிங் தகவல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - தீபக் சாஹர் கிடைக்க வாய்ப்பு? ஷாக்கிங் தகவல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – தீபக் சாஹர் கிடைக்க வாய்ப்பு? ஷாக்கிங் தகவல்!

IPL 2022 போட்டிகளில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய போராடிக் கொண்டிருக்கும் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் நட்சத்திர பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கிடைக்க வாய்ப்பிள்ளை என ஷாக்கிங் தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி சமீபத்தில் துவங்கிய இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு ஆட்டங்களில் தோல்வியடைந்திருக்கிறது. இந்த தொடர் தோல்வி CSK ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அந்த அணிக்குமே பெரிய அதிர்ச்சியாக தான் இருந்து வருகிறது. இந்த சூழலில் ஏப்ரல் 12 அன்று மும்பையில் வைத்து நடைபெறும் 15வது IPL சீசனின் ஐந்தாவது ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

வங்கியில் கடன் வாங்குபவர்கள், வழங்குபவர்கள் கவனத்திற்கு – RBI புதிய விதிகள் அறிவிப்பு!

ஆனால் போட்டிக்கு முன்னதாக அவர்களின் நட்சத்திர ஆல்ரவுண்டர் தீபக் சாஹரைப் பற்றி சில மோசமான செய்திகள் கிடைத்துள்ளன. அதாவது ஐபிஎல் 2022 சீசன் துவங்கியதில் இருந்து இதுவரை களத்தில் இறங்காத சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் பெங்களூரில் உள்ள என்சிஏவில் குவாட்ரைசெப்ஸ் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இதற்கிடையில் என்சிஏவில் சாஹருக்கு இரண்டாவது காயம் அதாவது முதுகில் மீண்டும் காயம் ஏற்பட்டிருக்கிறதாக தகவல்கள் கிடைத்துள்ளது. முன்னதாக, தொடைதசை காயம் காரணமாக இந்த சீசனில் பாதி போட்டியில் தீபக் சஹார் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவரால் இந்த முழு சீசனிலும் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் 2021 சீசனில் சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய பங்காற்றி இருந்த நட்சத்திர வீரர்களில் ஒருவரான சாஹர் கடந்த ஆண்டு 15 ஆட்டங்களில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போது அவர் இல்லாமல் வெற்றிக்கு தடுமாறி வரும் CSK அணி நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தில் உள்ளனர். இந்த தோல்வி தொடர்ந்தால் CSK அணி சீக்கிரமே லீக் சுற்றில் இருந்து வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மைக் ஹஸ்ஸி கூறும் போது, ‘ஜடேஜாவை கேப்டனாக அறிவித்தது ஒரு பெரிய மாற்றம். எம்எஸ் தோனி இவ்வளவு காலம் கேப்டனாக இருந்தார். அவர் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார். ஆனால் கேப்டனாக முதல் வருடத்தில் ஜடேஜாவுக்கு உதவ அவர் இன்னும் இங்கே இருக்கிறார் என்பதே பெரிய விஷயம். எனவே, ஜடேஜாவும் தோனியும் ஒவ்வொரு நாளும் கேப்டன்சி பற்றியும், தந்திரோபாயங்கள் பற்றியும், பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங்குடன் சேர்ந்து தலைமை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றியும், மாற்றத்தை முடிந்தவரை சுமூகமாக மாற்றுவது குறித்து பேசுவதை நான் அறிவேன்.

எல்லோரும் ஜடேஜாவை மிகவும் மதிக்கிறார்கள். மேலும் புதிய கேப்டனுடன் நாங்கள் உடன்படுகிறோம். ஜடேஜா இதுவரை நன்றாகவே இருக்கிறார். அவர் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார். மேலும் ஜடேஜா கேப்டனாக மிகவும் நிதானமாக உணர உதவும் வகையில், குழுவில் சில வெற்றிகளைப் பெறுவோம் என்று நான் நம்புகிறேன். அனைவரும் ஜடேஜாவை ஆதரிக்கின்றனர். விரைவில் சில வெற்றிகளை எதிர்பார்க்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!