இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!

0
இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவின் அடுத்த அலை தொடங்கி விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கொரோனா பரவல் இன்றும் வரையும் குறையவில்லை. மேலும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின் தாக்கத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அரசு கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு, பொது முடக்கம், போன்ற நடவடிக்கைகளை கையில் எடுத்தது. இந்த நடவடிக்கையால் நாட்டில் வேலையின்மை, விலைவாசி அதிகரித்ததால் மக்கள் அன்றாட உணவிற்கே சிரமப்படும் நிலைக்கு ஆளாகினர். இதையடுத்து கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, அனைவருக்கும் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 15,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 68 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று முன்தினம் 16,299 ஆக இருந்த ஒரு நாள் பாதிப்பு நேற்று 16,561 ஆகவும், இன்று 15,815 ஆகவும் குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,42,39,372 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றிலிருந்து 18,053 பேர் குணமடைந்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டம் – முதல்வர் தொடங்கி வைப்பு!

இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,35,93,112 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,19,264 ஆக குறைந்துள்ளது. மேலும் நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5,26,996 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.19 % ஆக குறைந்துள்ளது. இதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.27% ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.54 % ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 207.71 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 24,43,064 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!