தமிழகத்தில் குறையும் நீட் தேர்வு விண்ணப்பங்கள் – மாணவர்களின் எண்ணிக்கை சரிவு!
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ள மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து உள்ளது.
நீட் தேர்வு:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் ‘உழவர் அடையாள அட்டை’ பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் அரசு சார்பில் மாணவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நடப்பாண்டில் பயிற்சி அளிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு நீட் தேர்வு குறித்து பல எதிர்ப்புகளை முன்னெடுத்து வரும் நிலையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பது எதிர்மறையாக உள்ளது என கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்கள் தாமாக தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற அறிக்கை, இனி நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுமா என்ற கேள்விகளை எழுப்பி வருகிறது.
இந்திய நகரங்களில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் – தமிழ்நாடு முன்னிலை!
அதனை தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு கடந்த ஆண்டு 1,21,617 பேர் விண்ணப்பித்திருந்தனர். அனல் இந்த ஆண்டு 1,12,890 பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளி மாணவர்கள் 8,727 பேர் விண்ணப்பித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதனால் தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.