சீனாவில் பிறப்பு விகிதம் சரிவு – அதிக குழந்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்!
அதிக மக்கள் தொகை நாடாக விளங்கி வந்த சீனாவில் தற்போது பிறப்பு விகிதம் மிகவும் சரிவடைந்துள்ளது. இதனால், அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டும், அதற்காக சில சலுகைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு விகிதம்:
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா தான் விளங்கி வந்தது. இதனால், சீனா நாட்டில் மக்கள்தொகையை கட்டுப்படுத்த தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. இதனால், சீனா நாட்டில் நாளுக்கு நாள் மக்கள் தொகையின் வீதம் குறைய ஆரம்பித்துவிட்டது. இதனையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற சட்டம் கைவிடப்பட்டது. பின்னர், சீனா நாட்டில் வசிக்கும் மக்கள் 3 குழந்தைகள் வரைக்கும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், சீனாவில் நாளுக்கு நாள் மக்கள்தொகையின் வீதம் குறைந்துகொண்டே சென்றது. அதாவது, கடந்த 2 ஆண்டுகளாகவே சீனாவில் பிறப்பு விகிதம் மிகவும் சரிவடைந்துள்ளது. மூன்று குழந்தைகள் வரைக்கும் பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்தும் கூட அதிக வாழ்க்கை செலவு, கலாச்சார மாற்றம் மற்றும் சிறிய குடும்பத்தின் மீதுள்ள ஆர்வம் ஆகியவற்றின் காரணமாகவே சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்தபடியே இருந்து வருகிறது. இதனால், சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக கருக்கலைப்பு அதிகளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
சென்னை: நகை வாங்க இதுதான் சரியான நேரம் – அதிரடியாக குறைந்த தங்க விலை!
இதனால், சீனா மக்கள் தொகையை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சீனாவில் அதிக குழந்தையை பெற்றுக்கொள்ளும் தம்பதியினருக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மானியம், வரி தள்ளுபடி, சிறந்த சுகாதார காப்பீடு, கல்வி, வீட்டுக் கடன், வேலை வாய்ப்பு ஆகிய சலுகைகள் அதிக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியினருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்