தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த முடிவு? அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் மின்வாரியத்தின் மூலமாக தமிழக அரசிற்கு பல கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டை சமாளிக்க கூடிய வகையில் விரைவில் மின்கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்கட்டணம்:
தமிழகத்தில் மின் திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்வாரியத்தின் மூலமாக தமிழக அரசிற்கு கடந்த ஆண்டில் ரூ.72 ஆயிரத்து 96 கோடி வருவாய் கிடைத்தது. ஆனால், தற்போது 11 ஆயிரத்து 213 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எப்போதும், இது போன்ற இழப்பீடுகளை சமாளிக்க தமிழக அரசு தேசிய, தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்குகின்றனர்.
Exams Daily Mobile App Download
ஆனால், தேசிய, தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தமிழகத்திற்கு கடன் வழங்க முன்வரவில்லை. மேலும், தமிழகத்தில் மட்டுமே தற்போது 3 கோடிக்கும் மேலான மின் இணைப்புகள் இருக்கின்றன. அதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும், 33 தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவன மின் இணைப்புகளும் இருக்கின்றன. இதுவரை மின்வாரியத்தின் மூலமாக தமிழக அரசிற்கு இழப்பீடு வந்த போதெல்லாம் மின்கட்டணத்தை அரசு உயர்த்தியதே இல்லை.
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.75,000/-
ஆனால், தற்போது 20 சதவீதம் வரைக்கும் மின்கட்டணத்தை உயர்த்தலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது வரைக்கும் மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான எந்த அறிவிப்பையும் மின்வாரியம் வெளியிடவில்லை. ஆனாலும், கண்டிப்பாக மின்கட்டணத்தை உயர்த்தியே தீர வேண்டும் என்கிற நிலைமைக்கு மின்வாரியம் தள்ளப்பட்டுள்ளது. மேலும், கூடிய விரைவில் மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை மின்வாரியம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.