தமிழக மாநகராட்சிகளில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க முடிவு – ஜூலை முதல் புதிய வரி!
தமிழகத்தில் அனைத்து நிலை உள்ளாட்சியிலும் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வரி வசூல் செய்வதில் மேலும் கூடுதலான பணியாளர்களை நியமிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.
ஊழியர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் சொத்து வரி விகிதம் கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்ததால் உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்தது. அதன் தொடர்ச்சியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலவினம் அதிகரித்து நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டது. அதன்படி இந்த குழு சொத்து வரிகளை உயர்த்துவதற்கான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து இந்த பரிந்துரைக்கப்பட்ட குழுவின் அறிக்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதன்படி தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாநகராட்சியில் குடியிருப்பு கட்டிடங்கள், காலியிடம், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுவாக ஏப்ரல் 1ம் தேதி முதல் வரி வசூல் செய்யும் பணிகள் தொடங்கும். அதனால் தற்போது வரை உயர்த்தப்பட்ட சொத்து வரி விகிதத்தில் வரி வசூல் செய்யப்படவில்லை.
அக்னிபாத் திட்டம்: இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு வேலைகள் துவக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் ஜூலை முதல் புதிய வரி விகிதத்தில் சொத்து வரி செலுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் வரி வசூல் செய்ய கூடுதலான ஊழியர்களை நியமிக்க உள்ளதாக மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அத்துடன் திறமையான ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று வரி வசூல் செய்வதற்கு சில நகராட்சி, உள்ளாட்சி அமைப்பு கூடுதல் ஊழியர்களை நியமித்து வரி வசூலிக்கும் பணியை துரிதமாக மேற்கொள்ள உள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக மாநகராட்சி நிர்வாகம் வருவாய் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்