தமிழகத்தில் திரையரங்கம் திறப்பு குறித்த முடிவு – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீண்டும் திறப்பது குறித்து இந்த வாரம் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
தியேட்டர்கள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலைமையை சரி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு முன்னெடுத்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டு தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் தியேட்டர்களில் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டாயம் தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றதில் முறைகேடுகள்? – அமைச்சரின் அறிவிப்பு!
இந்நிலையில், நாடு விடுதலை பெற்ற 75ம் ஆண்டு தினத்தை கொண்டாடும் விதமாக சென்னை கடற்கரையிலுள்ள விவேகானந்தர் இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழ்நாடு மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் புகைப்படக் கண்காட்சி விழா, கொரோனா தொடர்பான நூல் மற்றும் கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கிவைத்தனர். மத்திய அமைச்சர் ஒரு புத்தகத்தை வெளியிட்டு, அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
TN Job “FB Group” Join Now
அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நாட்டின் 75 வது சுதந்திரதின விழா குறித்த விழிப்புணர்வுடன் கொரோனா பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு வாகனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறியானது இருப்பதாகவும், இந்தியாவிலேயே அதிகம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலங்களில் தமிழகம் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆகஸ்ட் 21ம் தேதி அரசு ஊழியர்களுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இந்தியாவிலேயே தடுப்பூசி அதிகமாக போடப்பட்ட மாநிலம் தமிழகம்தான் என்ற நிலையை உருவாக்க தனியாருக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசியையும் மத்திய அரசு மாநில அரசுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், இந்த வார இறுதியில் திரையரங்கு திறப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.