தமிழகத்தில் நாளை (டிச.3) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
தமிழகத்தில் நாளை (டிச.3) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் நாளை (டிச.3) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் நாளை (டிச.3) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதியான நாளை அம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு விடும். மாநிலம் முழுவதுமாக அல்லாமல் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள், சிறப்பு நாட்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற நாட்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக மாவட்ட நிர்வாகம் உத்தரவு வெளியிடும். குறிப்பிட்ட நாளிற்கு பதிலாக மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் DigiLocker முறையில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை – அரசாணை வெளியீடு!

அந்த வகையில் மதுரை மாவட்டத்திற்கு சித்திரை திருவிழா சமயத்தின் போதும் இராமநாதபுர மாவட்டத்திற்கு பசும்பொன் தேவர் ஜெயந்தி இது போன்ற நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழா நாளை டிசம்பர் 3ம் தேதி சிறப்பிக்கப்பட இருக்கிறது. இது மிகவும் பிரசத்தி பெற்ற திருவிழா ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மிகவும் கோலாகலமாக இந்த திருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல்? பெற்றோர்கள் எதிர்பார்ப்பு! ஒமிக்ரான் எதிரொலி!

இதனால் நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழா டிசம்பர் 3ம் தேதியான நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அறிவித்துள்ளார். இதற்கு பதிலாக டிசம்பர் 11ம் தேதியான சனிக்கிழமை அன்று பணி நாளாக இருக்கும் என்றும், அன்றைய தினம் அரசு அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!