தமிழகத்தில் டிசம்பர் 11 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு!!
தமிழகத்தில் தொடர்ந்து வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் வரும் டிச.11ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனியார் வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் வரும் டிச.11ம் தேதி நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்வதாக தகவல் வெளியிடுபட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – உடனடியாக வழங்கப்பட்ட நியமன ஆணை!!
மேலும் இதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக தங்களுக்கு தகுதியான ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளனர். அதனால் 5ம் வகுப்பு முதல் +2 வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரி, பொறியியல், தையல் பயிற்சி, நர்சிங் படித்துள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் இணையதள பதிவு அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்துகொள்ள தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிச.11ம் தேதி நாமக்கல் மாவட்ட அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு நேரில் சென்று பயன்பெறலாம்.
மேலும் நேர்காணலுக்கு செல்லும் வேலை தேடும் அனைவரும் தங்களது சுய விபரம், கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகலுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த முகாமில் கலந்துகொள்ளும் அனைவரும் உரிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய 04286 – 222260 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.