சென்னையில் டிச.3ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக டிச.3ம் தேதி தரமணி பகுதியில் ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு விடுத்துள்ளது. அத்துடன் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் மின் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துக்கு மின் கசிவு மற்றும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் மின் கோளாறுகள் தான் முக்கிய காரணமாகின்றன . மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் மின் பிளவு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. தற்போது பருவ மழைக்காலம் என்பதால் அநேக இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதனால் சாலைகளில் ஏராளமான இடங்களில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது. மேலும் சாலைகளில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
அதனால் இரவு நேரங்களில் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகவே தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்கின்றது. இதற்காக ஒரு குறிப்பிட்ட நேரம் செலவிட்டு மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அதிக விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அதனால் தமிழக அரசு மாதந்தோறும் மின் தடை அறிவிப்பை தொடர்ச்சியாக பின்பற்றி வருகிறது.
டிகிரி முடித்தவரா? – சென்னை Ericsson நிறுவன காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
இதன் விளைவாக தரமணி பகுதியில் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி அன்று மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து சி.எஸ்.ஐ.ஆர் ரோடு, எம்.ஜி.ஆர் நகர், தரமணி, கானகம் மெயின் ரோடு, வி.வி கோயில் தெரு ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் உடனடியாக மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.