தமிழகத்தில் நாளை (டிச.11) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!
சென்னையில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் ஊழியர்கள் மூலம் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மூலம் மின் இணைப்புகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மின் கம்பிகள் மாற்றுதல் வீதிகளில் செல்லும் மின் வயர்களை சரி செய்தல் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ளவைகளை கண்டறிந்து அகற்றுதல், மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகள் மிஞ்ச பராமரிப்பின் போது நடைபெற்று வருகிறது.
TNPSC குரூப் 4 (GS) தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வு..!
இதன் மூலம் மின் பயனாளர்களுக்கு பாதுகாப்பான மின்சாரம் உறுதி செய்யப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின் விநியோகம் தடை செய்யப்படுவது குறித்து முன்கூட்டியே அந்தந்த பகுதி செயற்பொறியாளர் மக்களுக்கு அறிவிப்பு செய்கின்றனர். இதனை அறிந்து மக்கள் வேலைகளை திட்டமிடுகின்றனர். மற்ற பகுதியை தொடர்ந்து நாளை (11.12.2021) சென்னையில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்! அரசு நடவடிக்கை!!
அதனால் கோவிலம்பாக்கம் எஸ் கொளத்தூர் மெயின் ரோடு, சத்யா நகர், காந்தி நகர், வாட்டர் கம்பெனி கே.பி.ஜி நகர், பிள்ளையார் கோயில் தெரு, பொன்னியம்மன் மெயின் ரோடு, சின்னப்பா நகர், விடுதலை நகர், ராஜம் நகர் ஆகிய பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.