ஆதார் அட்டை மூலமாக 4.78 லட்சம் வரை கடன்? செய்தியின் உண்மை நிலவரம் என்ன!

0
ஆதார் அட்டை மூலமாக 4.78 லட்சம் வரை கடன்? செய்தியின் உண்மை நிலவரம் என்ன!
ஆதார் அட்டை மூலமாக 4.78 லட்சம் வரை கடன்? செய்தியின் உண்மை நிலவரம் என்ன!
ஆதார் அட்டை மூலமாக 4.78 லட்சம் வரை கடன்? செய்தியின் உண்மை நிலவரம் என்ன!

இந்தியாவில் ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ரூ.4.78 லட்சம் கடன் கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போன்று செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி குறித்து பிஐபி ஃபேக்ட் செக் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

ஆதார் அட்டை

இந்தியாவில் அனைத்து சேவைகளையும் ஆன்லைன் முறையில் பெற முடிகிறது. ஆனால் தற்போது ஆன்லைன் முறையில் மோசடிகள் நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் தினந்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உக்திகளை மோசடிகளில் ஈடுபடுபவர்கள் கையாளுகிறார்கள். இதனால் பொதுமக்கள் தங்களின் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர். அதனால் ஆன்லைன் மோசடி தொடர்பாக பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு கடன் வழங்கப்படும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு – சிலபஸ் பற்றிய முழு விவரம் இதோ!

அத்துடன் ஆதார் மட்டும் இருந்தால் போதும் ரூ.4.78 லட்சம் வரை கடன் கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போன்று வேகமாக செய்தி பரவி வருகிறது. இது தொடர்பாக பிஐபி ஃபேக்ட் செக் அமைப்பு விளக்கம் அளித்துள்ளதாவது, கடந்த சில காலங்களாக ஆன்லைன் மூலமாக மோசடிகள் நடைபெறுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது, உங்களுக்கு வங்கிக் கடன் வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது, இந்த இணையதளத்தில் சலுகை விலையில் பொருட்கள் விற்கப்படுகிறது என்ற போலியான விளம்பரங்கள் நாள்தோறும் பரவி வருகிறது.

அதனால் வங்கி எண், ஓடிபி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பகிரக் கூடாது என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு ரூ.4.78 லட்சம் கடன் கொடுப்பதாக பரவி வரும் செய்தி போலியானது என்று பிஐபி ஃபேக்ட் செக் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த போலியான செய்தியை யாருக்கும் ஃபார்வார்டு செய்யக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது. மேலும் பொது மக்கள் தங்களின் தனிப்பட்ட நிதி விவரங்களை யாரிடமும் பகிர கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!