மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு? உண்மை நிலவரம் இதுதான்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட பண தட்டுப்பாட்டை போக்குவதற்காக ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய மூன்று தவணை டிஏ மற்றும் டிஆரை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜ்யசபாவில் டிஏ மற்றும் டிஆரை நிறுத்தி வைத்ததன் மூலம் சுமார் ரூ.34,402 கோடி சேமிக்கப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய அரசு ஜூலை 2021 இல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR ஐ முறையே 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தியது.
பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் 30 வரை கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!
மீண்டும் அக்டோபர் 2021 இல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்துள்ளது. பின்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA 31 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது ஜூலை 2021 முதல் நடைமுறைக்கு வந்தது. இப்போது, ஜனவரி 2022 முதல், சம்பளம் பெறுபவர்களுக்கு DA மற்றும் DR முந்தைய விகிதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்படும். இதை தவிர ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் ஒரு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சில்லறை பணவீக்க தரவுகளின் அடிப்படையில், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் DA மற்றும் DR ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படும்.
Exams Daily Mobile App Download
ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் இந்த வாரம் வெளியிடப்பட உள்ளது. பிப்ரவரியில் 6.1 சதவீதமாக இருந்த பணவீக்கம் மார்ச் மாதத்தில் ஏழு சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முக்கியமாக உணவுப் பொருட்களின் உயர்வு காரணமாக உயர்ந்தது. இந்த மாதத்தில் உணவுப் பணவீக்கம் 7.68 சதவீதமாக இருந்தது, இது பிப்ரவரியில் 5.85 சதவீதமாக இருந்தது. அகவிலைப்படி ஜூலை மாதத்தில் மேலும் நான்கு சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது, இதனால் டிஏ 38 சதவீதமாக இருக்கும். 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை உயர்த்துவதால் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைகின்றனர்.