தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – முக்கிய கோரிக்கை!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு - முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு - முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – முக்கிய கோரிக்கை!

ஈரோடு மாவட்டத்தின் கிளை சார்பில் நேற்று சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் உட்பட கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என சில முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

சம்பள உயர்வு

தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு வரைக்கும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் இதனை அடுத்து கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து அரசு பணிகளில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என சில பாதகமான அம்சங்கள் இடம் பெற்றதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு ஊழியர்கள் அவ்வப்போது கோரிக்கை விடுத்து வந்தனர்.

7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்தும் கூட அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. மேலும், கடந்த 2003 ஆம் ஆண்டில் மட்டுமே கிட்டத்தட்ட 1.76 லட்ச அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் மற்றும் சில சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து கடந்த கொரோனா காலகட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான சரண்டர் விடுப்பும் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்ட கிளை சார்பாக ஒரு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை வழங்க வேண்டும் எனவும், கொரோனா காலகட்டத்தின் போது நிறுத்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கான சரண்டர் விடுப்பை மீண்டும் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

மேலும், தமிழக அரசுகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வரவேண்டும் எனவும், சத்துணவு அங்கன்வாடி செவிலியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து அதற்கான ஊதியத்தையும் வழங்க வேண்டும் எனவும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!