மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி உயர்வு அமல்!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி. மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அகவிலைப்படியில் 3% உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு அமல்:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. நோய் பரவல் காரணமாக அனைத்து துறைகளும் முடக்கப்பட்டது. இதனால் இந்தியா அதிக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசு ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர். எனவே 2020ஆம் ஆண்டிற்கான 2 அகவிலைப்படி உயர்வு தவணைகள், 2021ஆம் ஆண்டிற்கான ஒரு அகவிலைப்படி உயர்வு தவணை ஆகியவற்றை தாமதமாக மத்திய அரசு கடந்த ஆண்டு வழங்கியது. இதன் மூலம் 47 லட்சம் ஊழியர்கள் பயன் பெற்றனர் என்றும் தெரிவித்திருக்கிறது. தற்போது நாடு முழுவதும் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு அனைவரும் திரும்பி வருகின்றனர்.
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் மத்திய அரசு ஓர் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி உயர்த்தும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு முன் தேதியிட்டு 2022 ஜனவரி 01 முதல் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. மேலும்,ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி நிவாரணமும் ( DR ) 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. DA உயர்வு மற்றும் DR உயர்வு மூலம் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
DA உயர்வால் பயன் அடைய உள்ளவர்கள்:
1.பொதுத்துறை நிறுவனம், தன்னாட்சி அமைப்புகளில் ஓய்வூதியம் (absorbee pensioners) பெறுபவர்கள்.
2.ஆயுதப்படை ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் சிவில் ஓய்வூதியம் பெறுவோர்.
3.ரயில்வே குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்.
4.அகில இந்திய சேவை ஓய்வூதியம் பெறுவோர்.
5.மத்திய அரசு உட்பட சிவில் ஓய்வூதியம் பெறுவோர்,குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்.
6.பர்மா சிவிலியன் ஓய்வூதியம் & குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த அரசு ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்பங்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும்.