வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணை வியாபாரிகள் வாங்க கூடாது – மத்திய அரசு உத்தரவு!
தமிழகத்தில் உள்ள கடை வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணை கட்டாயப்படுத்தி வாங்குவதாக எழுத குற்றச்சாட்டின் பேரில் தற்போது வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணை வாங்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
மத்திய அரசு உத்தரவு:
தமிழகத்தில் உள்ள மால், மார்க்கெட் மற்றும் சில்லறை வியாபார கடைகளில் பொதுமக்கள் பில் போடும் போது வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணை தருமாறு கட்டாயப்படுத்துகின்றனர். மேலும், சில கடைகளில் தங்களின் சிறப்பு ஆபர்கள் மற்றும் அம்சங்களை வழங்குவதற்காக செல்போன் எண்ணை கொடுத்தால் மட்டுமே பில் போட முடியும் என கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்திடமும் புகார் அளிக்கப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் தேர்வு இல்லாமல் வேலை – சம்பளம்: ரூ.240000/-
இந்நிலையில், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங் இது குறித்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, வாடிக்கையாளரின் தனிப்பட்ட விவரங்களை கட்டாயப்படுத்தி வாங்குவது நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி ஒரு குற்றமாகும். இந்நிலையில், வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணை கட்டாயப்படுத்தி ஒருபோதும் கடை வியாபாரிகள் வாங்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.