தமிழகத்தில் கடன் தவணை (EMI) செலுத்த கால அவகாசம் – 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம்!!
கொரோனா பரவல் காரணமாக பெரும் நிதி நெருக்கடியில் மக்கள் உள்ள காரணத்தினால் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன்களை செலுத்த கால அவகாசம் வழங்க வலியுறுத்த வேண்டும் என 12 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
முதலமைச்சர்களுக்கு கடிதம்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக மக்கள் பல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். முழு முடக்கம் காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரி செய்ய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்த வேளையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் உருவெடுக்கத் தொடங்கி மக்களை முடக்கி விட்டது.
மதுபானங்கள் டோர் டெலிவரி செய்ய அனுமதி – புதுச்சேரி அரசு உத்தரவு!
இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா முழு முடக்கம் காரணமாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன்களை திருப்பி வழங்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் வழங்கியது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் இந்த இரண்டாம் அலையில் அவ்வாறு எவ்வித சலுகையும் வழங்கப்படவில்லை. எனவே கடன் தவணை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் தமிழக மு.க.ஸ்டாலின் 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கொரோனா ஊரடங்கு காரணமாக சிறு, குறு, நடுத்தர தொழில் செய்யும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநரை வலியுறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.