8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.12,000/- சம்பளத்தில் காத்திருக்கும் அரசு வேலை !
நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன ஓட்டுநர், நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன உதவியாளர் (Driver of Mobile Therapy Unit, Helper of Mobile Therapy Unit) பணியிடங்களை நிரப்ப திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் (DDAWO) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அரசு பணிக்கான காலிப்பணியிடம்:
திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் (DDAWO) நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன ஓட்டுநர், நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன உதவியாளர் (Driver of Mobile Therapy Unit, Helper of Mobile Therapy Unit) பணிகள் காலியாக உள்ளது. இந்த பணிகளுக்கு என 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
DDAWO கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளியில் பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 3 ஆண்டுகள் இந்த பணியில் பணிபுரிந்த அனுபவம் பெற்று இருக்க வேண்டும். தமிழில் நன்றாக எழுத, படிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 1.1.2021 அன்று நாள் கணக்கின்படி 18 வயது முதல் 55 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். SC/ ST/ BC பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
DDAWO வருமானம்:
விண்ணப்பதாரர் அவர் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் ரூ.8,000/- முதல் ரூ.12,000/- வரை வருமானம் பெறுவார்கள்.
DDAWO தேர்வு முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாமல் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 11.4.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.