ஆன்லைன் மோகத்தால் டிடி அக்கா பிரியதர்ஷினிக்கு நேர்ந்த சோகம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
டிடியின் அக்காவான பிரியதர்ஷினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீலிஸ் பதிவிட வேண்டும் என்பதற்காக கடலுக்கு நடுவே இருக்கும் பாறையில் பரதநாட்டியம் ஆடியிருக்கிறார். அப்போது ராட்சச அலை வந்து பிரியதர்ஷினியை அடித்து சென்றுள்ள விஷயம் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
பிரியதர்ஷினி:
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் டிடியின் அக்கா பிரியதர்ஷினி. நடிப்பு, நடனம் என அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார். சின்னத்திரை சீரியல்களில் கூட நடித்திருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மானாட மயிலாட என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விருதுகளை வாங்கியிருக்கிறார். நடிப்பை காட்டிலும் நடனத்தில் தான் பிரியதர்ஷினி ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது பரத நாட்டிய டீச்சராக இருந்து வருகிறார்.
Exams Daily Mobile App Download
நடனத்தின் மீதுள்ள ஆசையால் 15 வருடங்களாக மதுரையை சேர்ந்த ஆர்.முரளிதரன் மற்றும் மணிமேகலை ஆகியோரிடம் பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். பரதநாட்டியம் மட்டுமல்லாமல் குரு கல்யாணியிடம் குச்சிப்புடி நடனத்தையும், குரு ஜிக்யாசா கிரி என்பவரிடம் கதகளி நடனத்தையும் கற்றுக்கொண்டார். இதனையும் தாண்டி சன், விஜய் டிவி போன்ற முக்கிய சேனல்களில் தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் எதிர்நீச்சல் என்னும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை கலாய்க்கும் நெட்டிசன்கள் – கடுப்பாக்கிய கதைக்களம்!
நடனம், நடிப்பு, தொகுப்பாளர் என பல துறைகளில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதள பக்கங்களிலும் நேரத்தை செலவிட்டு வருகிறார். பரதநாட்டியம் வகுப்புக்காக கடலுக்கு நடுவே இருக்கும் பாறையில் நடனமாடும் படியாக வீடியோ எடுத்திருக்கிறார். அப்போது ராட்சச அலை வந்து பிரியதர்ஷினியை அடித்து சென்றிருக்கிறது. எதிர்பாராத விதமாக பிரியதர்ஷினி உயிர் பிழைத்துள்ளார். அந்த வீடியோவினையும் பிரியதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அனைவரும் அந்த வீடியோவை பார்த்து விளையாட்டுக்கு கூட இது மாதிரியான ரிஸ்க்கை எடுக்காதீர்கள் என கூறி அட்வைஸ் செய்து வருகின்றனர்.