ரூ.18,536/- சம்பளத்தில் காத்திருக்கும் தமிழக அரசு வேலைவாய்ப்பு !
திருச்சிராப்பள்ளி மாவட்டகுழந்தை பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளர் பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 1 பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக அரசு குழந்தை பாதுகாப்பு திட்ட வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தகவல் பகுப்பாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
- புள்ளியியல், கணிதம், பொருளியல் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் (10+2+3 மாதிரி) பெற்றிருக்க வேண்டும்.
- தகவல் பகுப்பு பணியில் முன் அனுபவம் உள்ள விஎ்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,536/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
இப்பதவிக்கான விண்ணப்படிவத்தினை tiruchirappalli.nic.in என்ற இணையதளத்தில் இருத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் 02.09.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 1.8.1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி – 620 001. முகவரிக்கு வந்து சேரும் வகையில் (நேரிலோ,தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும்.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்