12 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.10592/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Out Reach Worker பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31-01-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு |
பணியின் பெயர் | Out Reach Worker |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
தூத்துக்குடியில் அவுட் ரீச் ஒர்க்கர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Out Reach Worker வயது வரம்பு:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு தூத்துக்குடி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 18-01-2023 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தமிழ்நாடு வனத்துறையில் 35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – உடனே விண்ணப்பிக்க முந்துங்கள்!
Follow our Instagram for more Latest Updates
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சம்பள விவரம்:
- மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.10,592/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்துசுரபி கட்டிடம், மணிநகர் 2வது தெரு, பாளை ரோடு, தூத்துக்குடி – 628003 என்ற முகவரிக்கு 31-01-2023 ஆம் தேதி அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.