தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், இந்திய அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த பாதுகாப்பு அமைப்பில் காலியாக உள்ள புறத்தொடர்பு பணியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 12.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு |
பணியின் பெயர் | புறத்தொடர்பு பணியாளர் |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு காலிப்பணியிட விவரங்கள்:
புறத்தொடர்பு பணியாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
புறத்தொடர்பு பணியாளர் கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியாளர் பதவிக்கான வயது வரம்பு:
30.06.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
DCPU அனுபவ விவரம்:
இந்த தமிழக அரசு பணிக்கு குழந்தை சார் வேலைகளில் குறைந்தபட்சம் ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
TNPSC Coaching Center Join Now
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.