தமிழக மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் |
பணியின் பெயர் | Assistant Cum Data Entry Operator |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மாவட்ட குழந்தைகள் நலக்குழும காலிப்பணியிடங்கள்:
Assistant Cum Data Entry Operator பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Data Entry Operator கல்வி தகுதி:
உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பதவிக்கு என 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
குழந்தைகள் நலக்குழும பணிக்கான வயது வரம்பு:
10.11.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Follow our Instagram for more Latest Updates
கணினி இயக்குபவர் விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 10.11.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://coimbatore.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
2வது தளம், பழைய கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோயம்புத்தூர் – 641 018.