மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு – ஒரு வருகைக்கு ரூ.1000/- ஊதியம்!
தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Counselor பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Counselor பணிக்கான காலிப்பணியிடங்கள் தேவைக்கு ஏற்ப நிரப்ப உள்ளதாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Psychology பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகும். மேலும் கூடுதல் கல்வி விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கவும்.
- விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் தேவையான அளவிற்கு பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
- விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கவும்.
- Counselor பணிக்கு என தேர்வு செய்யப்படும் நபர்கள் ஒரு வருகைக்கு ஆயிரம் ரூபாய் (ரூ.1,000/-) ஊதியமாக பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.