தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை ரெடி – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
நாகப்பட்டினம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (DBCWO) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Part Time Sweeper பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள் மட்டுமே (30.05.2022) உள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
DBCWO வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Part Time Sweeper பணிக்கு என மொத்தமாக 14 பணியிடங்கள் நாகப்பட்டினம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (DBCWO) காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
- Part Time Sweeper பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 32 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
- இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.3,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
- Part Time Sweeper பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
DBCWO விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திண்டுக்கல் – 624 004. என்ற முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் 30.05.2022 என்ற கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.