DBCWO நிறுவனத்தில் 30+ காலிப்பணியிடங்கள் – கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (DBCWO) சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. Part Time Sweeper பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் (30.05.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
DBCWO வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (DBCWO) காலியாக உள்ள Part Time Sweeper பணிக்கு என மொத்தமாக 34 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி நேர தூய்மை பணியாளர் பணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்கு எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
இந்த பகுதி நேர தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய நாளின் படி, குறைந்த பட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 30 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 02 வருடம் முதல் 05 வருடம் வரை வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.3,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download
இந்த DBCWO நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை கடைசி நாளுக்குள் (30.05.2022) அலுவலகம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.