தமிழகத்தில் Part Time அரசு வேலை – முழு விவரங்கள் இதோ..!
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் கிருஷ்ணகிரி (DBCWO) மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Part Time Sweeper பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | District Backward Classes and Minorities Welfare Office Krishnagiri (DBCWO) |
பணியின் பெயர் | Part Time Sweeper |
பணியிடங்கள் | 34 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DBCWO காலிப்பணியிடம்:
தற்போது வெளியான கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Part Time Sweeper பணிக்கு ஆண்களுக்கு 20 பணியிடம் மற்றும் பெண்களுக்கு 14 பணியிடம் என மொத்தமாக 34 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.
Best TNPSC Coaching Center – Join Now
DBCWO தகுதி விவரங்கள்:
இந்த பகுதி நேர தூய்மை பணியாளர் பணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மட்டும் பெண்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள். மேலும் விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு கட்டாயம் தமிழில் நன்கு எழுத மற்றும் படிக்க தெரிந்திருப்பது மிக அவசியம்.
DBCWO வயது விவரம்:
இந்த பகுதி நேர தூய்மை பணியாளர் பணிக்கு 01.07.2022ம் அன்றைய தேதியின் படி, குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வு விவரங்கள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
DBCWO ஊதிய விவரம்:
இந்த பகுதி நேர தூய்மை பணியாளர் பணிக்கு தேர்வு செய்து பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ரூ.3,000/- மாத ஊதியமாக அளிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
DBCWO தேர்வு முறை:
இந்த பகுதி நேர தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
DBCWO விண்ணப்பிக்கும் முறை:
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதி நேர தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணையதள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற்று, அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து, சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 30.05.2022 அன்றுக்குள் வரும்படி அனுப்ப வேண்டும்.