திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு!

0
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு!
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு!
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை கோவிலில் தற்போது நேரடி முறையில் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் மேலும் கூடுதலான டிக்கெட்டுகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் டிக்கெட்

ஆந்திர மாநிலத்தில் உலக புகழ்பெற்ற திருமலை திருப்பதி கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த ஆன்லைன் முறையில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. அத்துடன் குறைவான அளவில் மட்டுமே டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டது. இந்த டிக்கெட் வெளியான சில நிமிடங்களில் பக்தர்கள் முன்பதிவு செய்து விடுகின்றனர். அதனால் கிராமப்புற மக்களுக்கு இந்த டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்தது.

தமிழகத்தில் மார்ச் 4 மறைமுகத் தேர்தல் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்த வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் பல்வேறு தளர்வுகளை பக்தர்களுக்கு வழங்கியுள்ளது. இதில் குறிப்பாக நேரடி முறையில் தரிசன டிக்கெட்டுகளை தற்போது வழங்கி வருகிறது. இதனால் கிராமப்புற மக்களுக்கும் எளிமையான முறையில் டிக்கெட்டுகளை பெற முடிகிறது. அதன்படி தற்போது இலவச தரிசன டிக்கெட் நாளொன்றுக்கு 30 ஆயிரம் என்ற அளவில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு – தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

தற்போது மேலும் சில கூடுதல் தளர்வுகளை வழங்கி உள்ளது. திருப்பதியில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தற்போது ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அத்துடன் அந்த நாட்களில் இலவச தரிசனத்திற்கு ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலவச தரிசனத்திற்காக வழங்கப்படும் டோக்கன்களும் அதிகரிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை வழிபடும் நேரம் அதிகரிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!