திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் நேரடி முறையில் தரிசன டிக்கெட்டு!

0
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு - நாளை முதல் நேரடி முறையில் தரிசன டிக்கெட்டு!
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு - நாளை முதல் நேரடி முறையில் தரிசன டிக்கெட்டு!
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் நேரடி முறையில் தரிசன டிக்கெட்டு!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய கொரோனா காரணமாக ஆன்லைன் முறையில் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டது. இதையடுத்து தற்போது நாளை முதல் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தரிசன டிக்கெட்:

ஆந்திர மாநிலத்தில் உள்ள உலக புகழ்பெற்ற கோவிலான திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அத்துடன் இக்கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகைபுரிவர். மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் முறையில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலியின் முக்கிய அம்சங்கள்!

இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு மாத காலத்துக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த டிக்கெட் வெளியான 10 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டனர். ஆனால் இந்த டிக்கெட் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைப்பதில்லை அத்துடன் இணையதளத்தை பயன்படுத்த தெரியாதவர்களுக்கும் டிக்கெட் கிடைப்பதில்லை. அதனால் இவர்களுக்கு ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. மேலும் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

Post Office தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் – ரூ.1000 முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் வரை ரிட்டன்ஸ்!

அதனால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானமும் பக்தர்களின் நலன் கருதி பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் கிடைக்கும் வகையில் மீண்டும் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த இலவச தரிசன டிக்கெட் ஆதார் கார்டு அடிப்படையாக கொண்டு வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!