டிசம்பரில் திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தரிசன டிக்கெட் விநியோகம் துவக்கம்!
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட் விநியோகம் இன்று (27.11.2021) முதல் தொடங்குகிறது. மேலும் இலவச தரிசன டிக்கெட் விற்பனையும் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பதி:
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த வருடம் முதல் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய செய்ய வேண்டும். இதற்காக 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் விநியோகம் ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்யப்படுகிறது. முன்பதிவு அடிப்படையில் தினசரி 35,000 பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கி வருகிறது.
தமிழக மருத்துவத் துறையில் புதிதாக 7,296 காலிப்பணியிடங்கள் – அரசாணை வெளியீடு!
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த வாரங்களில் ஆந்திராவில் பெய்த அதிக கனமழையால் திருமலை பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. திருப்பதி கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீர் பக்தர்களை சிரமத்திற்கு உள்ளாகியது. அதனால் மழை நிற்கும் வரை பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியது. அதனை தொடர்ந்து மழையால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனால் தற்போது திருப்பதியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – பொங்கல் பரிசுடன் கரும்பு! ரூ.71 கோடி ஒதுக்கீடு!
இதையடுத்து மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட் விநியோகம் இன்று (27.11.2021) காலை 9 மணி அளவில் தொடங்கியுள்ளது. மேலும் நேரடி இலவச தரிசன டிக்கெட் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஆன்லைன் மூலமாக இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் திருமலையில் தங்குவதற்கான அறைகள் ஒதுக்கீடு நாளை இணையதளத்தில் வெளியாகும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.