திருப்பதியில் தரிசன சேவைக்கட்டணம் உயர்வு – தேவஸ்தான முடிவால் பக்தர்கள் அதிர்ச்சி!

0
திருப்பதியில் தரிசன சேவைக்கட்டணம் உயர்வு - தேவஸ்தான முடிவால் பக்தர்கள் அதிர்ச்சி!
திருப்பதியில் தரிசன சேவைக்கட்டணம் உயர்வு - தேவஸ்தான முடிவால் பக்தர்கள் அதிர்ச்சி!
திருப்பதியில் தரிசன சேவைக்கட்டணம் உயர்வு – தேவஸ்தான முடிவால் பக்தர்கள் அதிர்ச்சி!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் மலையப்பசுவாமி கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம் 25,000 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வஸ்திர அலங்கார சேவைக்கட்டணம் 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சேவை கட்டணம்:

திருப்பதியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் முதல் கட்டமாக இலவச தரிசன வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் தங்களின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி இலவச தரிசன டிக்கெட்களை பெற்று கொள்ளலாம்.

அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு – முதலமைச்சர் உத்தரவு!

அதன் தொடர்ச்சியாக மீண்டும் அனைத்து தரிசனங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் தரிசன சேவைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பதியில் தினசரி அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடைபெறும். இந்த சேவையை தரிசிக்க முன்பதிவு அவசியம் கட்டணம் 240 ரூபாயில் இருந்தது தற்போது கட்டணம் 2500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம் தற்போது 2500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – வெளியான ‘ஜாக்பாட்’ அறிவிப்பு!

உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும் திருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த பூஜையில் பங்கேற்பர். இந்த சேவைக்கு 1000 ரூபாய் மட்டும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வஸ்திரம் அலங்கார சேவைக்கான கட்டணம் 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏழுமலையான் அணியும் புடவை, 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்டப்பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. அதனால் இதனை பக்தர்களில் ஒருவர் சத்துவதாக வேண்டி கொண்டு அதற்கான பணத்தை அலுவலகத்தில் செலுத்தலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!