திருப்பதி இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
திருப்பதி தேவஸ்தானத்தில் இலவச தரிசனத்திற்கு இலவச டோக்கன் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்பதிவு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த காரணத்தால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வந்தனர். அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் கோயில்கள், திருவிழாக்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் முதலியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் குறைந்து வந்த காரணத்தால் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பள்ளிகளில் சரியும் மாணவர் வருகைப்பதிவு – தேர்வுகள் காரணமா?
அதனை தொடர்ந்து திருமலை ஏழுமலையான் கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச தரிசனம், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் மீண்டும் தொடங்கப்பட்டது. இலவச தரிசனத்திற்காக டோக்கன்கள் திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசா வளாகத்தில் வழங்கப்பட்டு வந்தது. 8 ஆயிரம் டோக்கன் வாங்க 30,000 மக்கள் குவிந்து வருவதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்தது. எனவே 26ம் தேதி முதல், இலவச தரிசனத்திற்கு டோக்கன் ஆன்லைனிலேயே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Best TNPSC Coaching Center – Join Now
திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக வழங்கப்பட்டு வந்த 8000 டோகன்களை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணயத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இடையூறுகள் இல்லாத வகையில் பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்து கொள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசமாக தொழில்நுட்ப வசதியை வழங்குகிறது என்றும் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் டோக்கன் பெறுவதால் கொரோனா தாக்கும் அபாயம் குறைவாக உள்ளதாக கருதப்படுகிறது.
ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது சிரமமாக உள்ளது. வீட்டில் உள்ள நான்கு பேருக்கு புக் செய்வதற்குள் முடிந்து விடுகிறது. நான்கு பேருக்கு முயற்சி செய்ததற்கு எனக்கு மட்டும் கிடைத்தது. தனிமனிதனாக வந்தாள் மேலே தங்குவதற்கு இடம் தரமாட்டார்கள். இதற்கு என்ன செய்வது விளக்கம் கூறவும்.
Dharsanam