Daily Current Affairs June 4 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs June 4 2021 in Tamil
Daily Current Affairs June 4 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 4 ஜூன் 2021

Top Current Affairs June 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

  • இந்திய விஞ்ஞானிகள் அறை வெப்பநிலையில் இயங்கும் நானோரோட் அடிப்படையிலான ஆக்ஸிஜன் உணர்கருவியினை உருவாக்கியுள்ளனர்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற ஆய்வு நிறுவனமான சென்டர் ஃபார் நானோ மற்றும் சாஃப்ட் மேட்டர் சயின்ஸின் விஞ்ஞானியான டாக்டர் எஸ் அங்கப்பனின் தலைமையிலான விஞ்ஞானிகள் இந்த ஆக்சிஜன் சென்சாரை உருவாக்கியுள்ளனர்.

இந்த கருவியானது புறஊதாகதிர்களின் செயல்பாட்டின் மூலமாக ஆக்சிஜனின் அளவை துல்லியமாக கணக்கிடுகிறது. இதன் மூலம் சுரங்கங்கள் மற்றும் அதி உயரத்தில் பணி  புரிபவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் உதவியினை வழங்க முடியும்.

  • பால்வெளி வீதியில் நட்சத்திர உருவாக்கம் குறைந்ததற்கான காரணத்தை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

8 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நட்சத்திர உருவாக்கம் அதிக அளவில் நடைபெற்றதையும் தற்போது அவற்றின் அளவு குறைந்து உள்ளதற்கான காரணங்களையும் புனேவில் உள்ள தேசிய வானியற்பியல் மையம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் வானிலை ஆராய்ச்சியாளர்கள், ஜெயன்ட் மீட்டர்வியூ ரேடியோ டெலஸ்கோப் எனும் தொலைநோக்கியின் உதவியுடன் கணக்கிட்டனர்.

இந்த ஆராய்ச்சியின் படி பால் வெளி வீதிகளில் உள்ள ஹைட்ரஜன் அணுவே நட்சித்திர உருவாக்கத்திற்கான முக்கிய எரிபொருள் ஆகும்.

தற்போது பால் வெளி அண்டத்தில் ஹைட்ரஜன் வாயுவின் அளவு  குறைந்துள்ளதே நட்சத்திர உருவாக்கம் குறைந்துள்ளதற்கான காரணம் ஆகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  • உள்நாட்டு நிலக்கரியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதன் மூலம் செலவினங்களை குறைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்புதலின்படி  இந்தியாவின் மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்கள் அதன் உள்நாட்டு நிலக்கரியை மின் உற்பத்திக்கு பயன்படுத்தலாம் .இந்த திட்டம் மின் உற்பத்திக்கான செலவை குறைக்கும்.

தற்போது பஞ்சாப், ஹரியானா மற்றும் உ.பி. மாநிலங்கள் இதன் மூலம் பயனடைகின்றன . பஞ்சாபில் மட்டும் எதிர்பார்க்கப்படும் சேமிப்பு ஆண்டுக்கு சுமார் 300 கோடி ரூபாய்.

  • இந்தியாவின் மிகப்பெரிய உணவு பூங்காவினை மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

உணவு பதப்படுத்துதலுக்காக இந்தப் பூங்காவில் உருவாக்கப்பட்டுள்ள நவீன உள்கட்டமைப்பு வசதிகளால் சத்தீஸ்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த உணவுப் பதப்படுத்துபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயனடைவதுடன், சத்தீஸ்கர் மாநிலத்தின் உணவு பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

  • ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழின் செல்லுபடித் தன்மை ஆயுள்காலம் முழுவதும் நீட்டிப்புமத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அறிவித்துள்ளார்.

7 ஆண்டுகாலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களின் சான்றிதழை மறு மதிப்பீடு செய்வது/ புதிய சான்றிதழ்களை வழங்குவது போன்ற தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

Monthly Current Affairs June

இந்த  அறிவிப்பானது ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அதற்காக தயார் செய்து கொண்டு  இருப்பவர்களுக்கு   சாதகமானதாக அமைந்துள்ளது.

  • இந்தியாவின் ஆயுஷ் அமைப்பானது பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பாரம்பரிய மருத்துவ தயாரிப்புகளின் தரப்படுத்தலை ஒழுங்குபடுத்துதல் குறித்த ஆன்லைன் கருத்தரங்கை நடத்தியுள்ளது.

இந்த நவீன தொழில்நுட்பத்தில் பாரம்பரிய மருத்துவத்தின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை ஆயுஷ் குழு விளக்கியது .

இந்த நிகழ்வில் இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாரம்பரிய மருத்துவத் துறையைச் சேர்ந்த பிரபல வல்லுநர்கள் மற்றும் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

சர்வதேச நிகழ்வுகள்

  • புதிய வானிலை செயற்கைக்கோள் சீனாவால் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

சீனா ஃபெங்யூன் -4 பி என்று பெயரிடப்பட்ட புதிய வானிலை செயற்கைக்கோளை  திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் ஏவியது.

இந்த செயற்கைக்கோள் வானிலை பகுப்பாய்வு, சுற்றுச்சூழல் மற்றும் பேரழிவு கண்காணிப்பு ஆகிய துறைகளுக்கு தனது பங்களிப்பினை வழங்கவுள்ளது .

செயற்கைக்கோளின் கண்காணிப்பு வரம்பில் ஆசியா, மத்திய பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகள் அடங்கும்.

  • ஐ.நா வின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு அறிக்கை .

ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (யு.என்.இ.பி.) மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றால் தொடங்கப்பட்டது.

இந்த அறிக்கையின் மூலம், உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் புத்துயிர் பெறுவதற்கான அவர்களின் பணியில் கைகோர்த்துக் கொள்ளுமாறு உலக நாடுகளை ஐக்கிய நாடுகள் வலியுறுத்தியுள்ளது

இந்த திட்டம் சுற்றுச்சூழல் அமைப்புகளின் அழிவை நிறுத்தி உலகளாவிய இலக்குகளை அடைய அவற்றை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா கொரோனா கூடுதலாக 800 மில்லியன் டாலர்களை அறிவித்தார்.

ஆன்லைன் தடுப்பூசி உச்சிமாநாட்டின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது, இது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை நியாயமான முறையில் விநியோகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொருளாதார நிகழ்வுகள்
  • பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் பிரபல இந்திய பொருளாதார நிபுணர் கல்பனா கோச்சார் இணைந்துள்ளார் .

சர்வதேச நாணய நிதியத்தின் மனிதவளத் துறையின் தலைவர் கல்பனா கோச்சர், இந்தத் துறையில் ஓய்வு பெற்ற பிறகு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் இணையவுள்ளார்.

  • ஆறாவது முறையாக ரிசர்வ் வங்கி தங்கள் ரெப்போ விகிதத்தை மாற்றியமைக்காமல் உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அதன்  ரெப்போ வீதத்தை ஆறாவது முறையாக 4.25% என்ற விகிதத்தில் வைத்துள்ளது

இந்தக் கொள்கையை அறிவிக்கும் போது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், 2021-2022 நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று கூறினார்.

  • தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக மே மாதத்திற்கான மேலாளர்களின் குறியீட்டு (பிஎம்ஐ) ஏப்ரல் மாதத்தில் 46.4 புள்ளிகளாக குறைந்துள்ளது.

இரண்டாவது கொரோனா அலை மற்றும் நாடு முழுவதும் ஊரடங்கின் காரணமாக  பி.எம்.ஐ 46.4 ஆக சுருங்கியுள்ளது ,இது ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த விகிதமாகும்.

  • இந்திய பாதுகாப்பு அமைச்சகம் விமான நிலைய கண்காணிப்பு ரேடர்களுக்காக மும்பையின் மஹிந்திரா டெலிஃபோனிக்ஸ் ஒருங்கிணைந்த அமைப்புகள் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது

 இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மஹிந்திரா டெலிஃபோனிக்ஸ் ஒருங்கிணைந்த அமைப்புகள் இடையே ஜூன் 3 ஆம் தேதி ரூபாய்  323 கோடி மதிப்புள்ள திட்டம் கையெழுத்தானது.

முக்கிய தினங்கள், விருதுகள்
  • பிரெஞ்சு நாவலாசிரியர் டேவிட் டியோப் உயரிய சர்தேச புத்தக விருதினை வென்றுள்ளார்.

பிரெஞ்சு நாவலாசிரியர் டேவிட் டியோப் அவரது At Night All Blood is Black என்ற நாவலுக்காக சர்வதேச புத்தக விருதினை  வென்றுள்ளார்.

இந்த விருதுடன் 50,000 டாலர் மதிப்புள்ள ரொக்க பரிசினையும் பெற்றுள்ளார்.

  • அமெரிக்க நடிகர் இயக்குனர் ஜோடி ஃபாஸ்டர் 2021 கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்
  • ஜூன் 4 – ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச நாள்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!