Daily Current Affairs June 1 & 2 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs June 1 & 2 2021 in Tamil
Daily Current Affairs June 1 & 2 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 1 & 2 ஜூன் 2021

Top Current Affairs June 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தேசிய  நிகழ்வுகள்:
  • இந்தியாவின் அறிவியல் மற்றும் தகவல் தொடர்பு இயக்குனரகம் கோவிட் பெருந்தொற்றினை விரைவாக மற்றும் எளிதாக அறிந்து கொள்வதற்கென செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி வாட்ஸ் ஆப் – ல்  முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியினை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம் பயனாளிகள் தங்களது எக்ஸ்-ரே புகைப்படத்தினை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி முடிவுகளை சேது செயலின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  • இந்திய ஆயுர்வேத முறையும் புதிய தொழில்நுட்பத்தினையம் பயன்படுத்தி சுத்தமான மற்றும் ஆரோக்கியமான குடிநீர் உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது இந்திய பாரம்பரியத்தையும் நவீன தொழில் நுட்பத்தையும்   இணைத்து ஆரோக்கியமான குடிநீரை வழங்குவது மற்றும் இயற்கை மூலிகைகளின் பயன்களை குடிநீர் மூலம் வழங்குவதுமாகும்
  • டாடா ஸ்டீலின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான டி.வி.நரேந்திரன் 2021-22 ஆம் ஆண்டுக்கான இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச நிகழ்வுகள்:
  • மைக்ரோசாப்ட் நிறுவனமானது இணைய பாதுகாப்புக்கான முதல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இது “ஆசிய பசிபிக் சைபர் பாதுகாப்பு நிர்வாக சபை” என்று பெயரிடப்பட்டுள்ளது, . இந்த சபையின் நோக்கம் இணைய அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கும் , இதில் பங்கேற்கும் நாடுகளிடையே முறையான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும் வலுவான தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்குவதாகும்.

  • சீனாவில் முதல் முறையாக H10N3 வைரஸ் மூலமாக பரவும் பறவை காய்ச்சல் நோய் பதிவு செய்யப்பட்டுள்ளது . 41 வயது மதிக்கத்தக்க கிழக்கு ஜியாங்சூ  மாகாணத்தை சேர்ந்த  ஒருவர் இவ்வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
  • உலக சுகாதார அமைப்பானது இந்தியாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட 1.617.2    வகை கொரோனா வைரஸிற்கு டெல்டா என பெயரிட்டுள்ளது. அதே போல் ஐக்கிய நாடுகளில் காணப்பட்ட வைரஸிற்கு  ஆல்பா என பெயரிட்டுள்ளது.
  • சீனாவில் உருவாக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு உலகளாவிய பயன்படுத்தலுக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசியானது சினோவாக் பையோடெக் நிறுவனத்தின்  மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிகழ்வுகள்:
  • மத்திய புள்ளிவிவர அமைச்சகத்தின் தகவலின் படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) தரவுகளின்படி, 2020-21 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில், இந்திய பொருளாதாரம் டிசம்பர் காலாண்டில் இருந்து நேர்மறையான நோக்கில் விரிவடைய வாய்ப்புள்ளது. கோவிட் -19 இன் இரண்டாவது அலைக்கு முன்னர், 2020-21 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்:
  • ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 91 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் சஞ்சீத்.
  • பிரெஞ்சு ஓபன் போட்டியில் இருந்து விலகுவதாக உலக தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள நவோமி ஒசாகா அறிவித்துள்ளார்.
Download TNPSC Notification 2021 
விருதுகள் , முக்கிய தினங்கள்:
  • ஜூன் 1 ஆம் தேதி உலக பால் தினமாக அனுசரிக்கபடுகின்றது. இதன் நோக்கமானது பால் பொருட்கள் துறையில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவது மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான செய்திகளை வழங்குவதும் ஆகும். இது 2001 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை துரையிறனால் அறிமுகப்படுத்தப்பட்டது
  • இந்திய அமைதிகாப்புப் படையினருக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு மரியாதை – கார்போரல் யுவ்ராஜ் சிங், பொதுமக்கள் அமைதிகாப்புப் படைவீரர் இவான் மைக்கேல் பிகார்டோ மற்றும் மூல்சந்த் யாதவ் ஆகியோருக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் மதிக்கத் தக்க விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய அமைதிகாப்புப் படையினருக்கு மரியாதை – ஐக்கிய நாடுகள் அமைப்பு: கார்போரல் யுவ்ராஜ் சிங், பொதுமக்கள் அமைதிகாப்புப் படைவீரர் இவான் மைக்கேல் பிகார்டோ மற்றும் மூல்சந்த் யாதவ் ஆகியோருக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் மதிக்கத் தக்க விருதானது வழங்கப் பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!